தேவையானவை:
புழுங்கலரிசி – ஒரு கப்,
கடலை மாவு – ஒரு கப்,
நெய் – 2 (அ) 3 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிது கெட்டியாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய் ஆகியவற்றை சேர்த்துப் பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.