ரிப்பன் பக்கோடா

தேவையானவை:

புழுங்கலரிசி – ஒரு கப்,

கடலை மாவு – ஒரு கப்,

நெய் – 2 (அ) 3 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை:

புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிது கெட்டியாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய் ஆகியவற்றை சேர்த்துப் பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

This entry was posted in காரம், Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a comment