தேவையானவை:
தேங்காய்த்துருவல் – 100 கிராம்
பேரீச்சை (டேட்ஸ்) – 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
சர்க்கரைபவுடர் – 50 கிராம்
மில்க்மெய்ட் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்ட், சர்க்கரை பவுடர், பேரீச்சை சேர்த்து ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி உருகியதும், துருவிய தேங்காயைச் சேர்த்து வறுக்கவும். தேங்காய் லேசாக வறுபட்டு நிறம் மாறும் போது, பேரீச்சைக் கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை உருகி பாகு கெட்டிப்பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து இறக்கவும். கையில் சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து, நெய் தடவிய பாத்திரத்தில் வைத்துப் பரிமாறவும். தேவைப்பட்டால் முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்க்கலாம். உருண்டையாக இல்லாமல் வித்தியாசமான வடிவில், பர்பியாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், அடுப்பில் இருந்து கலவையை இறக்கியதும், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும், நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.