தேவையானவை:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 100 கிராம்
எலுமிச்சைப்பழம் – 1 (சாறு எடுக்கவும்)
மைதா மாவு – 25 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்
நெய் – 25 கிராம்
செய்முறை:
அடுப்பில் பாலை சுட வைத்து நன்கு கொதித்ததும் இறக்கி, அதிலிருந்து முக்கால் லிட்டர் பாலை தனியாக எடுத்துக் கொள்ளவும். எடுத்த பாலில் எலுமிச்சைச் சாறை ஊற்றி பாலைத் திரிய வைக்கவும். திரிந்த பாலை கனமான துணியில் ஊற்றி, நன்றாக வடிகட்டவும், இதுதான் பனீர். மீதம் இருக்கும் பாலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இதில் மைதாமாவை சேர்த்து கெட்டிப்படாமல் கலக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்ததும், ஏற்கெனவே வடிகட்டி எடுத்து வைத்துள்ள பனீர், நெய் சேர்த்து அடிப்பிடிக்காதவாறு கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை திரண்டு ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும் போது, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, ரோஸ் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். நெய் தடவிய ஒரு தட்டில் கலவையைச் சேர்த்து ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.