தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்,
மைதா மாவு – ஒரு கப்,
மிளகுத்தூள் – 3 டீஸ்பூன்,
நெய் (அ) வனஸ்பதி – கால் கப்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நெய் (அ) வனஸ்பதியுடன் உப்பு சேர்த்து நன்றாகக் குழைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசையவும்.
மாவை மெல்லிய சப்பாத்தி போல் தேய்த்து, கத்தியினால் குறுக்கு நெடுக்காக டைமண்ட் வடிவ துண்டுகளாக வெட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.