சோமாஸ்

தேவையானவை

மேல்மாவுக்கு: மைதா – 2 கப்,

நெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு :

பொட்டுக்கடலை – ஒரு கப்,

துருவிய கொப்பரை – கால் கப்,

பூரா சர்க்கரை (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும். பூரா சர்க்கரை இல்லாவிட்டால் சாதாரண சர்க்கரையும் சேர்க்கலாம்) – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திரிப் பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

 

செய்முறை:

மேல்மாவுக்கு கொடுத்துள்வற்றை தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பொட்டுக் கடலை, கசகசா இரண்டையும் தனித்தனியாக வறுத்து, துருவிய கொப்பரை சேர்த்து மிக்ஸியில் பவுடராக்கவும். இதனுடன் பூரா சர்க்கரை, முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்… பூரணம் தயார்.

பிறகு, பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிது எடுத்து வாழை இலையில் மெல்லியதாக தட்டி, அதில் சிறிதளவு பூரணத்தை ஒரு பாதியில் வைத்து மறுபாதியால் மூடவும். இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு ஒட்டவும். பிறகு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேபோல எல்லாவற்றையும் செய்யவும்.

This entry was posted in காரம் and tagged . Bookmark the permalink.

Leave a comment