தேவையானவை:
முந்திரித் தூள்- அரை கப்,
பால், – ஒரு லிட்டர்,
சர்க்கரை – இரண்டரை கப்,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாலுடன் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலவை இறுகி கெட்டியாக வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.
கீழே இறக்கி, முந்திரித் தூள் , நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி (அடுப்பில் வைக்க வேண்டாம்), கெட்டியாக வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக போடவும்.