தேவையானவை:
மைதா – ஒரு கப்,
அரிசி மாவு – அரை கப்,
நெய் – 4 டீஸ்பூன்,
சர்க்கரைத்தூள் – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
மைதா, அரிசி மாவு, நெய் மூன்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, சிறிய வடிவ பூரிபோல தேய்க்கவும்.
மூன்று மூன்று பூரிகளாக ஒன்றன் கீழ் ஒன்று வைத்து ஒட்டி, பின்புறமாக பாய்போல் சுருட்டவும். பிறகு, மூன்று துண்டுகளாக்கி ஒவ்வொன்றையும் கைகளால் வட்டமாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து, மேலே சர்க்கரைத்தூள், ஏலக்காய்தூள் தூவி பரிமாறவும்.